மனம் மயங்கும் மழைக்காலம் 🌧☁️🌨⛈️ ( The enchanting rainy season 🌨☁️🌧⛈️)
ஊரில் வெப்பநிலை மிகக்கடுமையாக இருப்பதால் தீபாவளி விடுமுறைக்கு தங்களை குளிர்பிரதேசங்களுக்கு குறைந்தது இரண்டு நாட்களாவது அழைத்து செல்ல வேண்டும் என்று போர்கொடி தூக்கினர் என் மனையும் மகளும். ஒப்புக்கொண்ட நானும் பலவற்றை ஆராய்ந்து மேற்கு மலை தொடர்ச்சியில் அமைந்த மேகங்கள் தவழும் மேகமலை ,தேக்கடி , வாகமன் போன்ற இடங்களுக்கு போகலாமா என பலவாறாக குழம்பி கொண்டிருந்தேன் . அப்போதுதான் அந்த அறிவிப்பு வந்தது , வடகிழக்கு பருவமழை தொடங்கியதின் காரணமாக தென் தமிழகங்களில் பரவலாக மழை பெய்ய வாய்பிருப்பதாக. ஏற்கனவே எங்கே செல்வது என்ன செய்வது போன்ற எண்ணங்களால் அலைக்கழிந்த மனதுடன் இருந்த எனக்கு , இந்த அறிவிப்பு மேலும் குழப்பத்தை விளைவித்தது .இதை பற்றி என்னவளிடம் கலந்தாலோசித்தேன். புலி வருது ...புலிவருது ... என்று புளிப்பு காட்டுபவர்களின் பேச்சை நம்ப வேண்டாம் என்று பழிப்பு காட்டினார்.. வருடம் தோறும் வராமல் போகும் வடகிழக்கு பருமழையை நம்பி தைரியமாக பயணிக்கலாம் என்பது நம்பியவளின் நம்பிக்கை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு வானிலை மாறி , மாரி மாறாமல் பெய்வதை கவன...